காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இறந்தவர் சஞ்சய் சர்மா (40) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தெற்கு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள அச்சன் பகுதியில் வசித்து வந்தவர்.

சஞ்சய் சர்மா காலை 11 மணியளவில் சந்தைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த இடம் ஆயுதப்படையினரால் சுற்றிவளைக் கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE