டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் இறந்த வழக்கில் 6 பேருக்கு 14 நாள் காவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடமேற்கு டெல்லி, கஞ்சவாலா பகுதியில் கடந்த ஜனவரி 1-ம் தேதி அதிகாலை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண் மீது கார் மோதியது. இதில் அப்பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் பல கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகள்: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), கிருஷ்ணன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரை டெல்லி போலீஸார் தொடக்கத்தில் கைது செய்தனர். 6-வது குற்றவாளி அசுதோஷ், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த 6 பேரும் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டனர். இவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

காருக்கு அடியில் பெண் சிக்கியது தெரிந்தே காரை செலுத்தியதாக போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் ஒப்புக்கொண் டுள்ளதாக தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE