“இந்திய - சீன எல்லை குறித்த கவலை எனக்கு இல்லை; ஏனெனில்...” - அமித் ஷா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்திய - சீன எல்லை குறித்த கவலை தனக்கு இல்லை என்றும், ஏனெனில் நமது எல்லையை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் இந்தோ-திபெத் எல்லை படை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு அருகே உள்ள தேவனஹல்லி நகரில் இந்தோ - திபெத் எல்லை படைக்கான நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பேசிய அவர், இந்தோ - திபெத் எல்லை படை குறித்து தனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்திய - சீன எல்லை குறித்து தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்த அமித் ஷா, ஏனெனில் சீனாவை ஒட்டிய நமது எல்லையை பாதுகாப்பவர்கள் இந்தோ - திபெத் எல்லை படையினர் என்பதால்தான் என குறிப்பிட்டார். எனவே, இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் எவர் ஒருவரும் ஆக்கிரமித்துவிட முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

இந்திய - சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ - திபெத் எல்லைப் படையினரை இமய வீரர்கள் என்ற செல்லப் பெயரில் மக்கள் அழைப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, இது பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைவிட மிகப் பெரியது என குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்