ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற ஒரு லாரியை சித்ரா பாலம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பியோடியதை தொடர்ந்து லாரியை சோதனையிட முயன்றனர். அப்போது லாரியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில்லாரி தீப்பற்றியது. தீயணைப்பு படை யினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லாரியில் கருகிய நிலையில் இருந்த 4 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE