எஸ்சி, எஸ்டிக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்க கர்நாடகாவில் மசோதா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில‌த்தில் எஸ்சி வகுப்பினருக்கு 15 சதவீதமும், எஸ்டி வகுப்பினருக்கு 3 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் எஸ்சி.க்கள் இடஒதுக்கீட்டை 17 சதவீதமாகவும், எஸ்டி ஒதுக்கீட்டை 7 சதவீதமாகவும் கர்நாடக அரசு அதிகரித்தது. இதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மாநில சட்டத் துறை அமைச்சர் மாதுசாமி, எஸ்சி., எஸ்டி இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, மசோதா குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE