புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விளுக்கு நேற்று மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளிக்கையில் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் கடன் சதவீதம் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் ரூ.2,29,333.08 கோடி கடன் இருந்தது. இது தற்போது, ரூ.3,98,903.06 கோடியாக அதிகரித்துள்ளது. வெறும் கடன் சுமை மட்டுமின்றி, ஆந்திராவிற்கு ஆண்டுதோறும் கடன் சதவீதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2017-18 வருவாய் ஆண்டில், 9.8 சதவீதம் கடன் குறைந்தது. அதுவே 2020-21-ம் ஆண்டில், 17.01 ஆக கடன் சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ல் புதிய ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த நாளில், தேசிய அளவிலான ஆந்திராவின் பொருளாதார கடன் சதவீதம் 42.2 சதவீதத்தில் இருந்து 23.3 சதவீதமாக படிப்படியாக 2015-ல் குறைந்தது. 2021-ம் ஆண்டு 36.5 சதவீதமாக பொருளாதார கடன் உள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago