30 நதிகள் இணைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று கூறியதாவது: நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 16 திட்டங்கள் தீபகற்ப நதிகள் தொடர்பானவை. 14 திட்டங்கள் இமயமலை நதிகள் தொடர்பானவை.

அனைத்து திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைக்கு முந்தைய அறிக்கைகள் தயாராகிவிட்டன. 24 திட்டங்களுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகிவிட்டது. 8 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிந்துள்ளது. இதில் தீபகற்ப பகுதியில் கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு கடந்த 2021 டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.44,605 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.39,317 கோடி வழங்கும். இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE