லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் மூலம் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லடாக்கில் கடந்த 2020 மே மாதம் மோதலில் ஈடுபட்ட பின்னர், எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறுகையில், ‘ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் குறுகிய கால அளவில் தேவையான கட்டுமானங்களை மேற்கொள்ள முடிகிறது. சோதனை முயற்சியாக 3டி பிரின்டிங் மூலம் பாதுகாப்புத் தளங்கள் கட்டப்பட்டு சோதிக்கப்பட்டன. 100 மீட்டர் தொலைவிலிருந்து டி-90 பீரங்கியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தக் கட்டுமானங்கள் தாங்குகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்