பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள முகப்பில் தேசியக் கொடி பதிவேற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் நேற்று தேசியக் கொடியை பதிவேற்றம் செய்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 2-ம் தேதி சிறப்புமிக்க தினமாகும். 75-வது சுதந்திர தின நிறைவை நாடு கொண்டாடி வரும் நிலையில் எனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளேன்.

அனைத்து தரப்பு மக்களும் தங்களது சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் மூவர்ணக் கொடியை மாற்ற வேண்டுகிறேன்.

இந்த நேரத்தில் தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன். மூவர்ணக் கொடி நமக்கு வலிமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE