‘ஆபரேஷன் விஜய்’ வீரர்கள் தியாகத்திற்கு அஞ்சலி: கார்கில் மலை உச்சிக்கு ‘துப்பாக்கி மலை’ எனப் பெயர் சூட்டல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் "ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் செக்டாரின் டிராஸில் உள்ள 5140-வது மலைக்கு "துப்பாக்கி மலை" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு, துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும் 5140- வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது. இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது.

பீரங்கி படையின் சார்பில், ட்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பீரங்கிப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.சாவ்லா, லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, தீயணைப்பு மற்றும் ப்யூரி கார்ப்ஸின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஆபரேஷன் விஜய்யில் "கார்கில்" என்ற கெளரவப் பட்டத்தைப் பெற்ற அனைத்து பீரங்கி படைப்பிரிவுகளின் படைவீரர்கள் முன்னிலையில் விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது, எதிரி படைகளால் கைப்பற்றப்பட்ட உயரமான மலை உச்சிகளில் கார்கில் மலைத்தொடரில் உள்ள 5140-வது முனையும் ஒன்று. இதனை கார்கில் கதாநாயகன், பரம் வீர் சக்கரா விருது வென்ற கேப்டன் விக்ரம் பத்ரா தலைமையிலான படை ஜூன் 20, 1999ம் ஆண்டு திரும்ப மீட்டது. கார்கில் போர் ஆப்ரேஷன் விஜய் என்று அழைக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE