இந்தியாவில் 12,899 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு: சிகிச்சையில்  72,474 பேர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடுமுழுவதும் இன்று புதிதாக 12,899 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 847 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த 113 நாளில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 12,899 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,46,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 85,78,41,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 899 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32, 96,692 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 8,518 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,855 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,96,14,88,807 பேருக்கு கரோனா தடுப்பசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,24,591 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE