புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சிறப்பாக பணியாற்றுவதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் அமைந்தது. தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தது.
கடந்த 8 ஆண்டுகளில்... பதவியேற்று தற்போது 8 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிதலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களில் முதலிடத்தை அமைச்சர் ஸ்மிருதி இரானி பெற்றுள்ளார் என்று ஐஏஎன்எஸ்-சிவோட்டர் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவாளர்கள் தரப்பு, தேர்வு செய்த முதல் 5 அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்மிருதி இரானி பெற்றுள்ளார். தலித்துகள், நிலமில்லாத தொழிலாளர்கள், குறைந்த வருவாய் கொண்ட மக்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோர் அமைச்சர் இரானிக்கு முதலிடம் கொடுத்து தேர்வு செய்துள்ளனர்.
» ஜோகோவிச் & நடால் | 59-வது முறையாக நேருக்கு நேர் பலப்பரீட்சை
» IPL 2022 நிறைவு | முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரம்
அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்ப்பாளர்கள் தரப்பு தேர்வு செய்த மிகவும் சிறப்பாக பணியாற்றும் முதல் 5 அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.
இரு தரப்பிலும் 2-வது இடத்தைமத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றுள்ளார்.
அமித் ஷா, ஜெய்சங்கர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாளர்கள் தரப்பில் 3-வது இடத்தையும், எதிர்ப்பாளர்கள் தரப்பில் 16-வது இடத்தையும் பெற்றுள்ளார். இரு தரப்பில் 4-வது இடத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து இந்த கணக்கெடுப்பு ஐஏஎன்எஸ்-சிவோட்டர்ஸ் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.