புதுடெல்லி: கடும் வெப்பநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தியாவில் புதிய கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸில் நான்கு வாரங்கள் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் 100 டிகிரி செல்சியஸில் 90 நிமிடங்கள் வரையில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தத் தடுப்பூசியை இந்திய அறிவியல் நிறுவனமும் பெங்களூரைச் சேர்ந்த மைன்வேக்ஸ் என்ற பயோடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து உருவாக்குகின்றன. தற்போதுள்ள கரோனா தடுப்பூசிகள் மிக குறைவான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டியவை. கோவிஷீல்ட் தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் பைஸர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அவை வீரியம் இழந்துவிடும்.
இந்நிலையில், 100 டிகிரி செல்சியஸ் வரையில் தாக்குப்பிடிக்கும் தடுப்பூசி முக்கிய வரவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் திரிபுகளை எதிர்கொள்ளும் திறன்கொண்டதாக இந்தத் தடுப்பூசி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி தற்போது விலங்குகளிடம் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago