சர்வதேச விமான சேவைக்கு மறு உத்தரவு வரை தடை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி (நேற்று) வரைஏற்கெனவே தடை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், அவசர கால விமானங்கள் சில நாடுகளுக்கு இயக்கப்பட்டன. மேலும் சரக்கு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்கு நரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்களுக்கு பொருந்தாது. அதேபோல், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் சிறப்புஅனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE