இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது: புதிதாக 1,17,100 பேருக்கு தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது நேற்றைவிட 56.5% அதிகமாகும்.

ஒமைக்ரான் பரவலைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 876 பேருக்கும் டெல்லியில் 465 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,17,100.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 35,53,43,486.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 30,836.

இதுவரை குணமடைந்தோர்: 3,43,71,845

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 7.74% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 3.47% ஆக உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 302.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,83,178.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,71,363.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 149.66 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்