பிஹாரில் கரோனா 3-வது அலை தொடங்கி விட்டது; மக்களுக்கு நிதிஷ் குமார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பாட்னா: கோவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை மாநிலத்தில் தொடங்கியுள்ளது, அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் பல மாநிலங்களில், 781 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெல்லி 238 என்ற எண்ணிக்கையில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 167 , குஜராத்தில் 73 , கேரளா 65 என்ற எண்ணிக்கையிலும் ஒமைக்ரான் தொற்று உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

அடுத்து புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

இந்தநிலையில் கோவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை பிஹாரில் தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:

மூன்றாவது அலை பிஹாரில் தொடங்கியுள்ளது.
மக்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மருத்துவ ஊழியர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் அலையில் மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இதற்காக நான் பாராட்டுகிறேன்.

புதிய ஒமைக்ரான் மாறுபாட்டின் அதிகரித்து வரும் வழக்குகளை பிஹார் அரசும் கவனித்து வருகிறது, மேலும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

இங்குள்ள எந்த பூங்காவிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறாது. புத்தாண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அரசியல், சமூக, மத, கலாச்சார, விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைத் தடுப்பதற்காக அரசு வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.

கரோனா வைரஸின் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 21 மாநிலங்களின் பட்டியலின்படி, பிஹாரில் இதுவரை எந்த ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்