18-ம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் நாளை மறுதினம் ஒரு சில இடங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர வாய்ப்புள்ளது. மேற்கு நோக்கி சென்று தென் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வங்ககடலில் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் - வட தமிழ்நாட்டிற்கு அப்பால் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது.

நவம்பர் 18-ம் தேதி அன்று தென் ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடற்கரை பகுதிக்கு வந்து சேரும். இதனிடையே கர்நாடக கடற்கரையில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்கிறது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும். கிழக்கு மத்திய அரபிக்கடலில் கர்நாடகா கடற்கரையிலிருந்து வடக்கு கொங்கன் வரை தெற்கு முழுவதும் மகாராஷ்டிரா- கோவா கடற்கரை பரவியுள்ளது.

மழை எச்சரிக்கை

கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், ராயலசீமாவிலும் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும். குறிப்பிட்ட இடங்களில் அதிக மழையும் பெய்யும்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

நவம்பர் 17-ம் தேதி, வட தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திராவின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புண்டு.

18-ம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திராவின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில்
அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

காற்று எச்சரிக்கை

நவம்பர் 16-ம் தேதி மற்றும் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும் 40-50 கிமீ வேகத்தில், சில சமயங்களில் 60 கிமீ வரை பலத்த காற்று வீசும்.

நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தெற்கு ஆந்திரப் பிரதேசம், தமிழக கடற்கரையில் 40-50 கிமீ வேகத்தில், சில சமயங்களில் 60 கிமீ வரை பலத்த காற்று வீசும்.

மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அரபிக் கடலிலும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

16 -ம் தேதி கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு கேரளா, கர்நாடகா-கோவா கடற்கரை பகுதி வரை காற்று இருக்கக்கூடும்.

நவம்பர் 17-ம் தேதி மகாராஷ்டிர கடற்கரை, 18-ம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்று வீசும்.

நவம்பர் 19-ம் தேதி கிழக்கு அரபிக் கடலிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE