இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 107.92 கோடியைக் கடந்தது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,75,942 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 107.92 (1,07,92,19,546) கோடியைக் கடந்தது. 1,09,36,027 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,37,468 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.23 சதவீதமாக உள்ளது.
» டெல்லியை முடக்கிய காற்று மாசு; அவசர நடவடிக்கையாக வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு
» ரிவர்ஸ் கியரில் வளர்ச்சி; விறகு அடுப்புக்கு மாறும் மக்கள்: ராகுல் காந்தி சாடல்
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 132 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,46,950 ஆக உள்ளது; இது 255 நாட்களில் குறைந்த அளவாகும். நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.43 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 8,10,783 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 61.39 கோடி கொவிட் பரிசோதனைகள் (61,39,65,751) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 43 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.27 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.35 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 68 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 33 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.