உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றி

விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை ஹைதரா பாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் இமாரத் ஆராய்ச்சி மையம் அண்மையில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டது.

வான் பரப்பில் இருந்து தரையில் 50 முதல் 150 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிகுண்டு பரிசோதனை ஒடிசா மாநிலம் பலா சோரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தில் இருந்து இந்த வெடிகுண்டு ஏவப்பட்டது. இதில், குறிப்பிட்ட நேரத்தில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கினை வெடிகுண்டு வெற்றிகரமாக தாக்கி அழித்தது. வெடிகுண்டின் செயல்பாடுகள் சென்சார்கள் மற்றும் ரேடார்களால் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன.

பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து, டிஆர்டிஓ குழுவினரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்