ராஜஸ்தானில் கடும் வெயில் காரணமாக இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக 48.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.
இன்று சுருவில் 48.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இந்த கோடைகாலத்தில் பதிவான அதிகபட்ச வெயில் என்று கூறப்படுகிறது.
இங்கு மட்டுமல்லாமல் ஜைசால்மர், ஜோத்பூர், பார்மர், பிகானெர், ஸ்ரீகங்கா நகர், ஆகிய நகரங்களிலும் 48 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 46.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
மேலும் கடுமையான வெப்ப அலை இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.