கரோனா தொற்று; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,95,565 ஆக சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 48,698 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,95,565 ஆக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,01,83,143

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 48,698

இதுவரை குணமடைந்தோர்: 2,91,93,085

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 64,818

கரோனா உயிரிழப்புகள்: 3,94,493

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,183

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,95,565

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE