இந்தியா

ஒலிம்பிக் தினம்;  இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.

டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்குகிறது. நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT