இந்தியா

கரோனா தொற்று:  15 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை

செய்திப்பிரிவு

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 22,07,065 முகாம்களில்‌ 15,00,20,648 பயனாளிகளுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 21 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

103-வது நாளான நேற்று (ஏப்ரல் 28, 2021), நாடு முழுவதும் 21,93,281 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 ஆக (82.10%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,69,507 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 72.20 சதவீதம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,309 பேரும், கர்நாடகாவில் 39,047 பேரும், கேரளாவில் 35,013 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 30,84,814 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 16.79 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT