கரோனா பாதிப்பு புதிய உச்சம்;  ஒரே நாளில் 3,46,786 பேருக்கு  தொற்று: 2,624 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,624 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக3,46,786 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 25,52,940 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 1,38,67,997 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,19,838 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,89,544 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 13,83,79,832 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்