இந்தியாவில் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,37,567 ஆகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,194 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,09,04,940 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,06,11,731 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 11,106 குணமடைந்துள்னர்.
» 82 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி: 8 மாநிலங்களில் மட்டும் 4 லட்சம் பயனாளிகள்
» கண்காணிப்பில் இருப்பது போல் உள்ளது; காவலை நீக்குங்கள்: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,37,567 ஆகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 92 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,642 ஆக அதிகரித்துள்ளது.
நாடுமுழுவதும் மொத்தம் 82,63,858 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.