காஷ்மீரில் கையெறிகுண்டு தாக்குதல்; 6 பேர் காயம்

By பிடிஐ

காஷ்மீரில் பேருந்துநிலையத்தில் தீவிரவாதிகள் வீ சிய கையெறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்கள் கூடியிருந்த டிரால் நகரின் பேருந்துநிலையத்தில் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். அப்போது தீவிரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி வீசப்பட்ட கையெறிகுண்டு இலக்கை தவறியது.

இலக்கு தவறிய தீவிரவாதிகளின் கையெறிகுண்டு மக்கள் கூடியிருந்த சந்தையில் வெடித்தது, இதனால் பொதுமக்களில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்