காஷ்மீரில் கையெறிகுண்டு தாக்குதல்; 6 பேர் காயம்

By பிடிஐ

காஷ்மீரில் பேருந்துநிலையத்தில் தீவிரவாதிகள் வீ சிய கையெறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்கள் கூடியிருந்த டிரால் நகரின் பேருந்துநிலையத்தில் பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். அப்போது தீவிரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி வீசப்பட்ட கையெறிகுண்டு இலக்கை தவறியது.

இலக்கு தவறிய தீவிரவாதிகளின் கையெறிகுண்டு மக்கள் கூடியிருந்த சந்தையில் வெடித்தது, இதனால் பொதுமக்களில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்