விவசாயிகளுடன் உரையாடிய குடியரசு துணைத் தலைவர், பேச்சுவார்த்தை ஒன்றே சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழி என்று கூறினார்.
விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை தான் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் விவசாயிகளுடன் உரையாடிய அவர், எந்த ஒரு பிரச்சனையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்று கூறினார்.
விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளதை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
» அயோத்தியில் கட்டப்படும் மசூதி ஷரீயத் சட்டத்திற்கு எதிரானது: முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கருத்து
» சந்தனக் கடத்தல் வீரப்பனால் கவரப்பட்டு உ.பி.யில் கொள்ளைக் கூட்டம் அமைத்த இளைஞர் கைது
நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விவசாயத்துடன் இணைந்துள்ளதாக நாயுடு கூறினார்.
குடியரசு துணைத் தலைவர் உடனான உரையாடலின் போது, தங்களது அனுபவங்கள் குறித்து விவசாயிகள் பகிர்ந்து கொண்டனர். இயற்கை விவசாயத்தின் மூலமாக அதிக மகசூல் மற்றும் நன்மை கிடைப்பதாக அவர்கள் கூறினர்.