உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் கீழ், அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வந்தனர். அப்போது, பிஜ்னோர் நகரில் 2 நாட்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறிய இளைஞரின் செயல்பாடு சந்தேகத் துக்கு இடமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அந்த இளம்பெண் அங்கு இருப்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சாஹிப் (28) என்ற இளைஞர்தான் அந்தப் பெண்ணை கடத்தி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தன்னை சோனு என்ற பெயரில் இளைஞர் சாஹிப் காதலித்து ஏமாற்றியதாகவும், பின்னர், உண்மை தெரிந்த வுடன் முஸ்லிம் மதத்துக்கு மாறக் கோரி தன்னை வற்புறுத்தி வந்ததாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். இதன்பேரில், உ.பி.யில் புதிதாக இயற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் சாஹிப்பை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago