உலக குழந்தைகள் தினத்தில் அசாம் முதல்வரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த மாணவி

உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை 18 வயது மாணவி ஒருவர் நேற்று 2 மணி நேரம் நிர்வகித்தார்.

அசாமின் திப்ரூகர் மாவட்டம், நம்ருப் தேயிலை தோட்டத்தில் வசிக்கும் வந்தனா ஊரங் என்ற மாணவி, அசாம் முதல்வரின் ‘@CMOfficeAssam’ என்ற ட்விட்டர் கணக்கை நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நிர்வகித்தார். இவர், நம்ருப் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்தில் பிஏ ஹானர்ஸ் முதலாண்டு படிக்கிறார்.

சோனோவால் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றவுடன் வந்தனா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், “இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி. என்னைப் பற்றியும் மற்ற குழந்தைகளைப் பற்றியும் பேசுவதற்கு, குறிப்பாக கல்விப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்துவேன்” என்றார்.

அசாம் முதல்வரை ட்விட்டரில் 2,47,000-க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்