மோடியின் செயல்கள், கொள்கைகளின் பின்னால் அல்ல..ராணுவ வீரர்கள் பின்னால் மக்கள் நிற்பார்கள், : கபில் சிபல் கருத்து

By ஏஎன்ஐ

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்பார்கள், ஆனால் பிரதமர் மோடியின் கொள்கைகள், செயல்களுக்குப் பின்னால் நிற்பார்களா என்பது சந்தேகம்தான் என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது, அப்போது நாடாளுமன்ற செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாட்டுமக்களும் இருக்கிறார்கள் என்ற செய்தியை நாடாளுமன்றம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலளிக்குமாறு, “நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நம் ராணுவ வீரர்கள் பின்னால் நிற்பார்கள். அவர்களை நாம் வணங்குவோம். ஆனால் மோடியின் கொள்கைகள் நடவடிக்கைகளுக்கு பின்னால் மக்கள் நிற்பார்களா என்றால் சந்தேகம்தான்” என்று ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்