இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜிஓ அமைப்புகள் செயல் பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை வெளிநாடு களில் இருந்து நிதியுதவியைப் பெறுகின்றன.
சில என்ஜிஓக்கள் தீவிரவாதிக ளுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்கின்றன என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி 4470 தன்னார்வத் தொண்டு நிறுவனங் களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தடை விதித்தது.