கோட்டயத்தில் மறுமதமாற்ற நிகழ்ச்சி: 16 பேர் இந்து மதத்துக்கு மாறினர்

கேரள மாநிலம் கோட்டயத்தில் 16 பேர் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளனர்.

மறுமதமாற்ற நிகழ்ச்சிக்கு சில இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறும்போது, "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 16 பேர் மறுமதமாற்றம் செய்து கொண்டனர்" என்றார்.

கடந்த டிசம்பர் 25-ம் தேதி கிறுஸ்துமஸ் நாளில், கேரளாவில் 58 பேர் கிறுத்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினர் என்பது கவனிக்கத்தக்கது. கர் வாப்ஸி என்ற இந்த மறுமதமாற்ற நிகழ்ச்சிக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE