புதையலுக்காக விபரீதம்: தாயைக் கட்டிப்போட்டு 10 மாத குழந்தை நரபலி

ஹைதராபாத் அருகே புதையலுக்காக தாயைக் கட்டிப் போட்டு, அவரது 10 மாத குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரங்காரெட்டி மாவட்டம், அக்கம்பல்லி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் கணவரை விட்டு பிரிந்து தனது 10 மாத பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நரசிம்முலு என்பவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கட்டிப் போட்டார். பின்னர் அவர் அங்கு தூங்கி கொண்டிருந்த குழந்தையை அபகரித்து சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை அந்த பகுதியில் லட்சுமியின் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது.

மேலும், குழந்தையின் சடலம் அருகே எலுமிச்சை பழங்கள், மஞ்சள், குங்குமம், பூக்கள் போன்றவையும் இருந்துள்ளன.

இதனால் மந்திர தொழில் செய்யும் நரசிம்முலு புதையலுக்காக குழந்தையை கடத்தி நரபலி கொடுத்திருப்பார் என கிராமத்தினர் தெரிவிக் கின்றனர்.

தகவலறிந்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான நரசிம் முலுவை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்