பிஹாரில் சதி: கணவர் சிதையில் விழுந்து 70 வயது மூதாட்டி தற்கொலை

பிஹாரில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனது கணவர் சிதையில் விழுந்து 'சதி விரதம்' மேற்கொள்வதாக தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "சஹர்ஸா மாவட்டம் பர்மானியா கிராமத்தைச் சேர்ந்தவர் கவஹா தேவி. இவர், தனது கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மயானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது கணவர் எரிக்கப்பட்ட சிதையில் விழுந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கிராமவாசிகள் சிலர் சாட்சியம் தெரிவித்துள்ளனர். சிதையில் விழுந்த கவஹா தேவியை மீட்க உறவினர்கள் முற்படவில்லை எனக் கூறப்படுகிறது" என்றார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் கவஹா தேவியின் மகன், "என் தாயார் மாரடைப்பில் உயிரிழந்தார். அவரை என் தந்தையின் சிதையில் சேர்த்து தகனம் செய்தோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்