அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெலங்கானா அரசு அழைப்பு

குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ஹைதராபாத் வர வேண்டும் என தெலங்கானா அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஒபாமா வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். ஒபாமா ஹைதராபாத் வர வேண்டும் என தெலங்கானா அரசு சார்பில், தகவல் தொழில் நுட்பம், பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.டி ராமாராவ், ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்தியா வரும் போது ஹைதாராபாத்திற்கும் வரும்படி அழைப்பதற்கான கடிதத்தை அதிகாரிகளிடம்வழங்கினார். இது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்