ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மர்ம நபர்கள் சிலர் அமிலம் ஊற்றியதால் சட்டக் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நவ்ஷெரா பகுதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிக்கு வெளியே 21 வயது மாணவி ஒருவர் மீது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அமிலத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை யடுத்து படுகாயமடைந்த அந்த மாணவி அப்பகுதியில் உள்ள எஸ்கேஐஎம்எஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அமிலம் ஊற்றிய நபர்களை தேடி வருகிறோம்” என்றார்.
இது கடந்த 2 ஆண்டுகளில் நகரில் நடைபெற்ற 2-வது அமில வீச்சு சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பகத்-பர்சுல்லா பகுதியில் 30 வயதுடைய தனியார் பள்ளி ஆசிரியை அமில தாக்குதலுக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago