பொதுவாக நாடாளுமன்ற வளா கத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தான் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நேற்று முற்றி லும் மாறுபட்ட நிகழ்வாக பாஜக அமைச்சர்களும், எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் பக்திப் பாடல் பாடியும், வழிபாடு நடத்தியும் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி முடக்கி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புத்தி வர வேண்டி இந்த நூதன வழிபாட்டு போராட் டத்தை பாஜக அமைச்சர்களும், எம்.பி.க்களும் நடத்தினர்.
மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த குமார், தவார் சந்த் கேலாட், ராம் விலாஸ் பாஸ்வான், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரும், பாஜக எம்.பி.க்களும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு நல்ல புத்தி தருமாறு வழிபாடு நடத்தினர். பின்னர் காந்தியடிகளுக்கு மிகவும் விருப்பமான “ரகுபதி ராகவ ராஜா ராம்…” என்ற பாடலைப் பாடி காங்கிரஸுக்கு நல்ல புத்தி வழங்குமாறு வேண்டிக் கொண்டனர்.
மாநிலங்களவையில் இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்த சில நிமிடத்தில் இந்த வழிபாடு நடத்தும் போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago