நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து எழுதப்பட்ட முக்கிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து வெளியிட, நேதாஜி அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.
ஒடிஸா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அசோக்குமார் தலைமையிலான குழு நேதாஜி அறக்கட்டளையின் நிதி ஆதாரத்தை ரூ. 2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.
வரும் ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை பெரும் விழாவாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் தற்போது ஆங்கிலத்தில் ஒலி-ஒளிக் காட்சிகள் வழங்கப்படுகின்றன. இனி, ஒடியா, இந்தி, பெங்காலி மொழிகளிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டாக்கிலுள்ள நேதாஜியின் பரம்பரை வீடு அருங்காட்சியமாக கடந்த 2003-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதன் அருகிலுள்ள கட்டிடங்களையும் தந்த நிறத்துக்கு மாற்ற கட்டாக் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.