சர்ச்சை பேச்சு: கருத்துக் கூற சாத்வி மறுப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் சமீபத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் துணை கமாண்டன்ட் பி.எஸ்.வர்மா உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, நேற்று கான்பூருக்கு வந்தார்.

பின்னர், பதேபூருக்கு புறப்பட்ட சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம், அவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்க சாத்வி நிரஞ்சன் ஜோதி மறுத்துவிட்டார்.

முன்னதாக அவரை பதவியி லிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே, தனது பேச்சுக்கு சாத்வி நிரஞ்சன் ஜோதி மன்னிப்புக் கோரியிருந்தார். அவரை பெருந் தன்மையுடன் மன்னித்து விடும்படி பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்