அரசு பஸ்ஸில் தீ: ஹைதராபாத்தில் 48 பயணிகள் தப்பினர்

ஹைதராபாத்தில் அரசு பஸ்ஸில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தெலங்கானா அரசு பஸ் ஒன்று ஹைதராபாத், அமீர்பேட்டை அருகில் மைத்ரிவனம் என்ற இடத்தில் நேற்று செல்லும்போது, பஸ்ஸின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து பஸ்ஸை நிறுத்தும்படி அலறினர். பஸ் நிற்பதற்குள் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் வழியாக சிலர் குதித்து தப்பினர். பின்னர் பஸ் நின்றபிறகு அவசர அவசரமாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதனால் 48 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அமீர்பேட்டை போலீஸார், பயணிகளை மாற்று பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.

தீ விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். பஸ்ஸில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்