ஆந்திரா: ரயிலில் மயக்க மருந்து தூவி பயணிகளிடம் கொள்ளை

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே, ரயிலில் மயக்க மருந்து தூவி பயணிகளிடமிருந்து நகை, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஒரு கும்பல் நேற்று கொள்ளையடித்துச் சென்றது.

விசாகப்பட்டினம் - மும்பை இடையிலான எல்.டி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை விஜய வாடா அருகே சென்றபோது, எஸ்-1 பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் மீது ஒரு கும்பல் திடீரென மயக்க மருந்து (க்ளோரோபாஃம்) தூவியது. இதனால் பயணிகள் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து பெண்கள் அணிந் திருந்த நகைகள் மற்றும் ஆண் களிடம் இருந்த நகை, பணம், செல்போன், லேப்டாப் போன்ற வற்றை அக்கும்பல் கொள்ளை யடித்தது. பின்னர் காஜிப்பேட்டை ரயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, இவர்கள் தப்பிச்சென்றனர்.

ரயில் நின்றவுடன் அதிகாரிகள் எஸ் 1 பெட்டிக்குச் சென்று பார்த்ததும் விபரீதத்தை உணர்ந்தனர். மயக்கம் தெளிந்த பயணிகள் இது குறித்து காஜிப்பேட்டை ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்