திருவனந்தபுரத்தில் ஐ.எஸ். சுவரொட்டி: போலீஸ் விசாரணை

திருவனந்தபுரத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான சுவரொட்டியை அப்புறப்படுத்திய போலீஸார், இதை வைத்தது யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தின் மத்திய பகுதியில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரி சந்திப்பு அருகே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

ஐஎஸ் அமைப்பின் செயல் பாடுகளுக்கு ஆதரவான வாசகங்கள் அதில் இருந்தன. இது பற்றிய தகவல், போலீஸ் சிறப்பு பிரிவுக்கு வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த சுவரொட்டியை அகற் றினர். இதுகுறித்து நகர காவல்துறை ஆணையர் எச்.வெங்கடேஷ் கூறும்போது, “இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தம்பனூர் காவல் சரக ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் களின் பதிவுகள் ஆராயப்படும். தேவைப்பட்டால் உளவுப் பிரிவின் உதவி பெறப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்