பள்ளி சிறுமிகள் பலாத்காரம்: பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவரும்,முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசும்போது:

கர்நாடகத்தில் பள்ளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டிய முதல்வர் சித்தராமையாவும்,உள்துறை அமைச்சர் ஜார்ஜூம் அமைதியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஏதேதோ உளறி கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடைய மகள்களையும், குடும்பத்தாரையும் பாலியல் பலாத்காரம் செய்தாலும் இதே போல அமைதியாக இருப்பார்களா?

பொறுப்பில் இருந்து கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே?''என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். கர்நாடக முதல்வர் சித்தராமையா,உள்துறை அமைச்சர் ஜார்ஜூக்கு எதிராக பேசிய பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதனிடையே அவரை கண்டிக்கும் வகையில் பெங்களூரு அனந்தராவ் சதுக்கத்தில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் அவரது உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்