மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத்திற்கு தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படுகிறது.
கடந்த 1990-91ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார் ரஷீத் மசூத். அப்போது திரிபுராவில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கினார் என்பது ரஷீத் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் அண்மையில் ரஷீத் மசூத் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தீர்ப்பு வழங்கியது.