தேர்தலில் போட்டியிடாமல் ப.சிதம்பரம் ஓடி ஒளிவது ஏன்? - பாஜக கேள்வி

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிந்து கொண்டது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று செய்தியா ளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக கூறியது:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 7 ஆண்டு கள் வரை நிதியமைச்சராக இருந் தவர், இப்போது தேர்தலில் போட்டியிட மறுத்து ஓட்டமெடுத் துள்ளார். தனது சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது.

காங்கிரஸில் அவர் ஒருவரது நிலைமை மட்டும் அப்படியில்லை. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் நிலையே இப்படித்தான் உள் ளது. தேர்தலில் நிச்சயம் தோல்வி யடைந்துவிடுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த மனநிலை. 10 ஆண்டுகளில் மக்களுக்கு ஏதாவது சிறு நன்மை யாவது செய்திருந்தால்தானே அவர்களால் ஓட்டுக் கேட்டு செல்ல முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE