செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு: ரூ.50 லட்சம் மரங்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம் மரங்களை கைப்பற்றினர்.

போலீஸார் மீது தாக்குதல்

திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி கடப்பா மாவட்டத்திலும் நீண்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை கடப்பா மாவட்டம், கோடூரு மண்டலம், மாதவராவ்பாடு என்ற இடத்தில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரம் வெட்டி கடத்தும் சுமார் 30 தொழிலாளர்கள், போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்தத் தொழிலாளர்களை சரண் அடையுமாறு போலீஸார் வலியுறுத் தினர். எனினும் அவர்கள் தொடர்ந்து தாக்கியதால் போலீஸார் 2 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இவர்கள் வெட்டி வைத்திருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை போலீஸார் கைப்பற்றி வனத் துறையிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாகியுள்ள கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்