கருப்புப் பண விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயிலை முற்றுகையிட்டு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வெங்கய்ய நாயுடு தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, ககோலி தஸ்திடார் உள்பட அக்கட்சி எம்.பி.க்கள் பெரும்பாலோனோர் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், "மோடியின் சர்வாதிகாரம் பொருத்துக் கொள்ளப்படமாட்டாது. கருப்புப் பணத்தை மீட்டெடுங்கள்" என கோஷம் எழுப்பினர்.
ஆட்சிக்கு வந்தால், கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் எனக் கூறிவிட்டு பாஜக தற்போது வார்த்தை தவறிவிட்டது எனவும் கடுமையாக விமர்சித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago