ஹரியாணா முதல்வர் மீது ஷூ வீச்சு

ஹரியாணா மாநிலம் டப்வலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா மீது விவசாயி ஒருவர் ஷூவை வீசி உள்ளார். ஆனால் அது அவர் மீது படவில்லை.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ரயில்வே மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஹூடா பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீது ராஜா ராம் (45) என்பவர் ஷூவை வீசி

னார். ஆனால் அது ஹூடா மீது படாமல் மேடைக்கு அருகே விழுந்தது. பின்னர் அந்த நபரை கைது செய்து விசாரித்தோம். இதில் அவர் சிர்சா மாவட்டம் நதுசாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

இதற்கு முன்பு பானிப்பட் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹூடா மீது ஓர் இளைஞர் ஷூவை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.- பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்