அசாராம் பாபு ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி அசாராம் பாபு சார்பில் ஜோத்பூர் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE