மேற்கு வங்கத்தில் சாலை விபத்து: 16 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 1 குழந்தை உள்பட 16 பேர் பலியாகினர்.

இன்று காலை 7.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த டிரக் எதிரே வந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பகியாகினர். மேலும் 4 பேர் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

விபத்தில் பலியானவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் மூடப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்களும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE