மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 1 குழந்தை உள்பட 16 பேர் பலியாகினர்.
இன்று காலை 7.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த டிரக் எதிரே வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பகியாகினர். மேலும் 4 பேர் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
விபத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் மூடப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்களும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.